Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல்!

.

யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வாகனத்தின் மீது இன்று (19) இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணத்திலிருந்து- முல்லைத்தீவு பாடசாலைகளுக்கு செல்லும் ஆசிரியர்கள், வாடகை அடிப்படையில் வாகனம் ஒன்றினைப் பெற்று அதில் பயணம் செய்து வந்துள்ளனர்.

வழமை போல இன்றைய தினமும் பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளையில், பளை பகுதியில் வைத்து குறித்த வாகனத்தின் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. 

கல்வீச்சு தாக்குதல் சம்பவத்தின் போது ஆசிரியர்களுக்கு எதுவும் நிகழவில்லை.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆசிரியர் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாக சங்கத்தின் உப தலைவர் ஆ.தீபன் திலீசன் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய பொலிசாரின் செயற்பாட்டுக்கும், ஆசிரியர்கள் மீதான இன்றைய தாக்குதலுக்கும் தொடர்புள்ளதாகவே பாரிய சந்தேகம் எழுகின்றது என்று இச்சம்பவம் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வடமாகாண ஆளுநர் உடனடியாக இச்சம்பவம் தொடர்பில் பொருத்தமான நடவடிக்கையை மேற்கொண்டு, குறித்த குற்றத்தைப் புரிந்தவர்களையும் உடந்தையாக செயற்பட்டவர்களையும் உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் வெளிமாவட்டங்களுக்கு செல்லும் ஆசிரியர்களின் போக்குவரத்து மற்றும் விடுதி வசதிகள் குறித்து எந்தவொரு கரிசனையும் அற்று செயற்படும் அரசாங்கம், ஆகக்குறைந்தது ஆசிரியர்கள் பாதுகாப்பாக சென்று வருவதற்கேனும் ஆவனம் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.