Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பக்திமயமாக காட்சியளித்த பசறை மாநகர்; 12 தேர்கள் ஓரிடத்தில் சங்கமம்

.

பசறையில் சிறப்புமிக்க வருடாந்த ஆடி மகோற்சவ தேர் திருவிழா ஊர்வலம் நேற்று மாலை (20 ) ஆரம்பமாகி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகின்றது.

பசறை பிரதேசத்தில் வரலாற்று சிறப்புமிக்க சின்னக்கதிர்காமம் என போற்றப்படுகின்ற அம்மணிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், பசறை நகர் ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், கிக்கிரிவத்தை அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி ஆலயம், எல்டெப் அருள்மிகு ஸ்ரீ சிவசுப்ரமணிய கோயில், கோணக்கலை கீழ்பிரிவு தோட்ட அருள்மிகு ஸ்ரீ முருகன் கோயில், டெமேரியா மாத்தன்னை தோட்ட அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோயில், கோணக்கலை மேற்பிரிவு அருள்மிகு ஸ்ரீ முருகன் ஆலயம், கல்குடாவத்தை முருகன் ஆலயம் ஆகியவற்றின் தேர்கள் பசறை நகரை வலம் வந்தன.

இதில் பெருந்திரளான பக்த அடியார்கள் கலந்துகொண்டிருந்தனர். பசறையில் நடைபெறுகின்ற சிறப்புமிக்க தேர் திருவிழாவில் இம்முறை பன்னிரண்டு தேர் பவனிகள் இடம்பெற்றன.

1965ஆம் முதல் பசறை பிரதேசத்தில் நடைபெறுகின்ற தேர் திருவிழா இலங்கையில் அதிக எண்ணிக்கையான தேர் பவனிகள் ஓரிடத்தில் சங்கமிக்கின்ற சிறப்புமிக்க கலாசார விழாக்கோலமாக இடம்பெறுகின்றமை சிறப்பம்சமாகும்.

Oruvan

Oruvan

Oruvan

Oruvan

Oruvan