Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

தில்லியில் காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது.

.

தில்லியில் காற்றின் மாசு அளவு அபாயகரமான அளவை விட 4 மடங்கு அதிகமாக உள்ளது. தில்லி நகரம் அடிப்படையில் நவம்பர் முதல் ஜனவரி வரை வாழத் தகுதியற்ற நகரமாக மாறிவிடுகிறது. தில்லி நாட்டின் தலைநகராகவே இருக்க வேண்டுமா?

மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக, பிரதமர் மோடியின் நெருங்கிய நம்பிக்கையாளரும், பீகார் பாஜக பொறுப்பாளருமான வினோத் தாவ்டே பல கோடி ரூபாய் பணத்தை விநியோகம் செய்த போது, ​​கையும் களவுமாக பிடிபட்டார். தேர்தல் ஆணையம் சரியாக வேலை செய்யாததால் இதுபோன்ற சம்பவங்கள் நிகழ்கின்றன. பாஜகவின் கொள்கைகள் இளைஞர்களுக்கு, விவசாயிகளுக்கு எதிரானது. பாஜக அரசு ஆட்சியில் இருக்கும் வரை அரசியலமைப்புச் சட்டம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும். தங்களின் திட்டத்தின் மூலம் நாட்டு மக்களை வழிநடத்த பாஜக விரும்புகிறது. அரசியலமைப்பைக் காப்பாற்ற நாம் அனைவரும் ஒற்றுமையுடன் தொடர்ந்து போராட வேண்டும்.

மகாராஷ்டிர முன்னாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான தாக்குதல் மிகவும் மோசமானது. பாஜக தலைமையிலான மகாயுதி அரசாங்கத்தின் கீழ் குண்டர்கள் எப்படி செயல்பட்டு வருகின்றனர் என்பது மீண்டும் அம்பலமாகியுள்ளது.

அமெரிக்காவில் 2023-24ஆம் கல்வியாண்டில் சர்வதேச மாணவர்கள் பட்டியலில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. 3.3 லட்சத்துக்கும் அதிகமான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் படித்து வருவதாக அமெரிக்க தூதரகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள ஓபன் டோர்ஸ் அறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளன.

தில்லியில் காற்று மாசு காரணமாக 22 ரயில்கள் தாமதமாக வந்தன. 9 ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. அதே போல 8 விமானங்கள் வேறு நகரங்களுக்கு திருப்பிவிடப்பட்டன. 

  சபரிமலையில் பக்தர்கள் வருகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாளில் 2.60 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்து சொந்த ஊர் திரும்பியுள்ளனர்.