Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விவாதம் ஜூன் 6

.

6 ஆம் திகதி சஜித்-அனுர விவாதம்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இருவருக்குமான விவாதம் ஜூன் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சஜித் பிரேமதாஸவுடனான விவாதத்திற்கு வழங்கப்பட்ட திகதிகளில் இருந்து, அனுரகுமார திஸாநாயக்க, ஜூன் 6ஆம் திகதியை ஏற்றுக் கொண்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் சார்பில், அதன் செயற்குழு உறுப்பினர் நலிந்த ஜயதிஸ்ஸ ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

இதன்படி, விவாதத்தை தயாரிப்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தி நியமித்த நளின் பண்டாரவுடன் விவாதம் நடைபெறும் இடம், நேரம் மற்றும் நோக்கம் குறித்து கலந்துரையாடவுள்ளதாக நளிந்த ஜயதிஸ்ஸ மேலும் தெரிவித்தார்.

முன்னதாக இரு கட்சிகளின் பொருளாதாரக் குழுக்களுக்கு இடையிலான விவாதம் மே 27 முதல் 31ஆம் திகதி வரையிலும், கட்சித் தலைவர்களுக்கிடையிலான விவாதம் ஜூன் 3ஆம் திகதி முதல் 7ஆம் திகதி வரையிலும் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்திருந்தார்.

இது குறித்து தேசிய மக்கள் சக்திக்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்த விவாதத்திற்கு தேவையான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த விவாதத்தை செய்தி சேகரிக்க அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.