Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற இந்த குண்டுகள் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஈழத்தில் தான்...!!

ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெறுகிற போரில் கூட பயன்படுத்த தடை.

கொத்துக்குண்டுகள்:
ஆங்கிலத்தில் CLUSTER BOMBS என்றழைக்கப்படுகிற இந்த குண்டுகள் கடந்த 20 ஆண்டுகளில் மிக அதிகமாக பயன்படுத்தப்பட்டது ஈழத்தில் தான்...!! ஒரு உலோக உறைக்குள் அடைக்கப்பட்டிருக்கிற சிறுசிறு குண்டுகள் ஒரே நேரத்தில் வெடித்துச்சிதறி மழைபோல பொழிந்து பல திசைகளிலும் தாக்கி துளைக்கும்... ஒரு நாட்டுக்கும் இன்னொரு நாட்டுக்கும் நடைபெறுகிற போரில் கூட பயன்படுத்த தடைசெய்யப்பட்ட இந்த கொத்துக்குண்டுகளைத்தான் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் (NO FIRE ZONE) ஏகத்துக்கும் கொட்டித்தள்ளியது சிங்கள இனவெறி இராணுவம்...
பலுசிஸ்தானில் பாகிஸ்தான் இராணுவம், தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை பயன்படுவதை கண்டித்து போராடிய இந்தியா தான்...ஈழத்தில் மிகச்சரியாக குண்டு வீச விமானிகளுக்கு பயிற்சியளித்தது. விமானத்திலிருந்து குண்டுகளை மிகச்சரியாக பள்ளிகள் மீதும், மருத்துவமனைகள் மீதும், பாதுகாக்கப்பட்ட பகுதிகள் மீதும் வீச இந்திய ராடார்கள் உதவி செய்தது...!! கொன்று குவிக்கப்பட்ட பிணங்களில் கந்தகத்தின் நெடியோடு இந்தியத்தின் துரோகமும் கலந்திருந்தது