Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரயில் பணிமனை ஊழியரை காணவில்லை: பணிமனையில் இருந்து ரயில்கள் பயணங்களை ஆரம்பிப்பதில் தாமதம்

.

கொழும்பு தெமட்டகொட புகையிரத நிலைய வளாகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் கடமையில் இருந்து விலகியதன் காரணமாக கொழும்பு கோட்டையிலிருந்து செல்லும் ரயில் சேவைகள் தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போன சக ஊழியரைக் கண்டுபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி தெமட்டகொட வளாகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் பணியை நிறுத்தியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திலிருந்து சில ரயில்கள் இரத்துச் செய்யப்படுவதோடு தொடர்புடைய சேவைகளில் தாமதங்களும் ஏற்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், இன்று காலை கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி புறப்படவிருந்த பொடி மெனிகே மற்றும் பதுளை ஒடிசி புகையிரதங்கள் இதுவரையில் சேவையில் ஈடுபடவில்லை என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் (செயல்பாடுகள்) என்.ஜே.இடிபோலகே தெரிவித்தார்.

தற்போதைய சூழ்நிலை காரணமாக பல ரயில் பயணங்கள் இரத்து செய்யப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.