Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் போராட்டம்- இந்திய தூதரகத்திற்கு கடும் பாதுகாப்பு!

.

எல்லை தாண்டும் இந்திய இழுவை படகுகளின் அத்துமீறலை கண்டித்து யாழ் மாவட்ட தீவக கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து இன்று (27) போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டமானது யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் ஆரம்பமாகி அருகாமையில் அமைந்துள்ள யாழ். மாவட்ட கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் உதவி ஆணையாளரிடம் மகஜர் ஒன்றினை கையளித்து விட்டு தொடர்ந்து யாழ் வைத்தியசாலை வீதியூடாக யாழ். இந்திய துணை தூதரகத்தினை அடைந்தது.

இந்த போராட்டத்தின் போது,
தாண்டாதே தாண்டாதே எல்லை தாண்டாதே!
வேண்டும் வேண்டும் நீதி வேண்டும்!
அள்ளாதே அள்ளாதே எமது வளத்தை அள்ளாதே!
வாழ விடு வாழ விடு எங்களை வாழ விடு!
ஆகிய கோஷங்களை எழுப்பிய வண்ணம் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

போராட்டகாரர்கள் இந்தியத் துணைத் தூதரத்துக்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த நிலையில், பொலிஸார் இந்திய தூதரகத்திற்கு கடுமையான பாதுகாப்பினை வழங்கி இருந்தமை குறிப்பிடத்தக்கது.