Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் பலி!

உயிரிழந்த போர் வீரர்களில் அறுவர் ரஷ்யாவிலும், இருவர் உக்ரைனிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் உரியிழப்புகள் பதிவாகியுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கை வீரர்கள் எட்டு பேர் பலி: விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ள அரசாங்கம்.

ரஷ்ய – உக்ரைன் போரில் ரஷ்ய இராணுவத்துடன் இணைந்து கொள்வதற்காக ஆட்கடத்தற்காரர்களால் அனுப்பட்ட இலங்கை இராணுவ வீரர்கள் 08 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பிரகாரம் இந்த உயிரிழப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

உயிரிழந்த போர் வீரர்களில் அறுவர் ரஷ்யாவிலும், இருவர் உக்ரைனிலும் உயிரிழந்துள்ளனர். மேலும் உரியிழப்புகள் பதிவாகியுள்ளதாக என்பது குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

மனித ஆட்கடத்தற்காரர்களால் இதுவரை 83 இராணுவ வீரர்கள் ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். அவர்களில் 60 பேர் ரஷ்யாவிற்கும், 23 பேர் உக்ரைனுக்கும் அனுப்பட்டுள்ளனர்.

ரஷ்ய-உக்ரைன் போரில் கூலிப்படையாக செயற்படும் இலங்கை இராணுவத்தின் முன்னாள் வீரர்கள் பலர் கொலை செய்யப்பட்டமையை அறிக்கையொன்றை வெளியிட்டு பாதுகாப்பு அமைச்சு உறுதிப்பிடுத்தியிருந்தது.

ஓய்வுப் பெற்ற இராணுவ வீரர்கள் பலர் வெளிநாட்டு முகவர்களால் ஊடாக போலி வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு உக்ரைன் – ரஷ்ய போர் முனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

அதிக சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட போலியான வாக்குறுதிகளின் பிரகாரம் ஆட்கடத்தல்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர்கள், ரஷ்ய-உக்ரைன் போரில் முன்கள வீரர்களாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இலங்கை இராணுவத்தின் ஓய்வு பெற்ற வீரர்களை கூலிப்படையாக அனுப்பி ஆட்கடத்தலுக்கு பிரதானமாக செயற்பட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முன்னாள் மேஜர் ஜெனரல் ஒருவரும் அவருக்கு ஆதரவாக செயற்பட்ட முன்னாள் சர்ஜென்ட் மேஜர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.