Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிக வசதிகளுடன்அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

,

பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் புனரமைக்கப்பட்டு மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அதி தீவிர சிசு பராமரிப்பு (NICU )பிரிவு இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

வடமாகாண ஆளுநர் வி.வேதநாயகன் யாழ் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரன், வடமாகாண சுகாதார செயலாளர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் யோகேஸ்வரன் திவாகர் ஆகியோர் கலந்து கொண்டு திறந்து வைத்தனர்.
இலங்கையில் அதிக வசதிகளுடன் கூடிய சிசு சிகிச்சை பிரிவு என அறியப்படுகிறது.இச்சிகிச்சை பிரிவில் செயற்கை சுவாசம் வழங்கக் கூடிய 6 இயந்திரங்களுடன் கூடிய விடுதி, குழந்தையுடன் தாய் தங்கி நின்று சிகிச்சை பெறுவதற்கான 6 கட்டில்களுடன் கூடிய விடுதி, சிசுக்களுக்கு பாலூட்டுவதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு சிகிச்சை வழங்கும் விடுதி, 10 கட்டில்களுடன் கூடிய தாய் சேய் பிரிவு, பாலூட்டும் அறை, பிறந்து 42 நாட்களுக்கு உட்பட்ட சிசுக்களுக்கான கிளினிக் அறை என பல வசதிகளுடன் கூடிய சிகிச்சை பிரிவு திறந்து வைக்கப்பட்டது.அத்துடன் குழந்தைகளுக்கான 98 வீதமான சிகிச்சை வழங்க முடிவதுடன்,அறுவை சிகிச்சை தவிர குறைமாத குழந்தை பராமரிப்பு போன்ற பலவற்றிற்கு யாழ் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பாமல் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலேயே சிகிச்சை வழங்க முடியும் எனவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.