Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

சர்ச்சைக்குரிய ஊழல் மோசடிகள்: அரசாங்கம் அதிரடி விசாரணைக்கு தயார்!

.

கடந்த காலங்களில் பெரும் சர்ச்சைக்கு வழிவகுத்த ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ உள்ளிட்ட பாரிய அளவிலான ஊழல் மோசடிகள் தொடர்பிலான முறைப்பாடுகளை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகின்றமை தெரிவந்துள்ளது.

தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ள ஊழல் மோசடிகள் தொடர்பிலான ஆவணங்கள் அதிகளவில் காணப்படுவதால் அது தொடர்பிலான வழக்கு விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது.

விசேடமாக, ‘மத்திய வங்கி பிணைமுறி மோசடி’ , ‘சிரிலிய சவிய’ மற்றும் ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டமை, கடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்குகள் உள்ளிட்ட பாரிய சர்ச்சைகளுக்குள்ளான விடயங்கள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் மேற்கொள்ள நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இலஞ்ச ஊழல் தடுப்புப் பிரிவினர் மூலம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு முன்னிலைப்படுத்தப்படும் முறைப்பாடுகள் மற்றும் ஏனைய தொழில்நுட்ப பிழைகள் காரணமாக கடந்த காலங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது ஒத்திவைக்கப்பட்ட அநேகமான வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

அதன்படி, அதிக அவதானம் செலுத்தப்பட வேண்டிய பல முறைப்பாடுகளை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.