Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

உயிரிழந்த படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை

இங்கை இராணுவம் கூலிப்படையாக பணி -யுத்த வலையத்திற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் காய விபரங்கள் குறித்து தெரியாதுள்ளது.

ரஷ்ய – உக்ரைன் போரில் இலங்கையர்: ஆட்கடத்தல்காரர்களுக்கு எதிராக பாதுகாப்புச் செயலாளர் எச்சரிக்கை

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கையில் பணியாற்றுவதற்கு ஆட்களை சேர்க்கும் மனித கடத்தல்காரர்களுக்கு பலியாக வேண்டாம் என இலங்கை படையினருக்கு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கையில் ஆயுதப் படைகளுடன் இணைப்பதான போலி வாக்குறுதிகளால் இலங்கைப் படையினர் ஏமாற்றப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நிலவுரிமை, குடும்ப உறுப்பினர்களுக்கு ரஷ்ய குடியுரிமை மற்றூம் ஒரு மில்லியனுக்கும் அதிகளவான மாதச்சம்பளம் உள்ளிட்ட விடயங்களை முன்வைத்து ஏமாற்றப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், குறித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளதுடன், உயிரிழந்த படையினரின் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படவில்லை எனவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைப் படையினர் பலர் ஏற்கனவே யுத்த வலையத்திற்குள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்புகள் மற்றும் காய விபரங்கள் குறித்து தெரியாதுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டப்பூர்வமாக இவர்அள் ஆட்சேர்ப்பு செய்யப்படவில்லை எனவும், மாறாக கூலிப்படையினராக பணிபுரிய வற்புறுத்தப்பட்டனர் எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த நிலையில், மனித கடத்தல்காரர்களுக்கு இரையாவதைத் தவிர்க்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதனிடையே, ரஷ்ய – உக்ரைன் போர் நடவடிக்கையில் இலங்கை படையினர் கூலிப்படையாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஈடுபட்ட மனித கடத்தல்காரர்களை கைது செய்வதற்கு குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), பொலிஸ் திணைக்களம், மற்றும் புலனாய்வு சேவைகள் இணைந்து செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.