Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தல்: இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது

.

ஜனாதிபதி தேர்தல்: இலங்கைக்கான பயண ஆலோசனையை அமெரிக்கா புதுப்பித்துள்ளது

ஜனாதிபதித் தேர்தலை கருத்திற்கொண்டு பிரஜைகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு இலங்கைக்கான தனது பயண ஆலோசனையை அமெரிக்காவின் இராஜாங்கத் திணைக்களம் புதுப்பித்துள்ளது.

இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ளதால், தேர்தலுக்கு முன்னரோ, தேர்தலின் போதோ அல்லது அதற்குப் பின்னரோ ஆர்ப்பாட்டங்கள் நிகழலாம் என்று அந்த ஆலோசனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“சில சந்தர்ப்பங்களில், போராட்டக்காரர்களை கலைக்க பொலிஸார் தண்ணீர் பீரங்கி மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை பயன்படுத்த்கூடும்.

இந்நிலையில், அமெரிக்க குடிமக்கள் அனைத்து கூட்டங்களையும் தவிர்க்க நினைவூட்டப்படுகிறார்கள்.

அமைதியான கூட்டங்கள் கூட, வன்முறையாக மாறக்கூடும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் இலங்கைக்கு பயணிக்கும் குடிமக்கள் சுற்றுலா இடங்கள் மற்றும் நெரிசலான பொது இடங்களுக்குச் செல்லும்போது நிலைமையை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைப் பின்பற்றவும், உள்ளூர் ஊடகங்களைக் கண்காணிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.

22 தேர்தல் மாவட்டங்களில் 17 மில்லியனுக்கும் அதிகமான பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களைக் கொண்டு, இலங்கையில் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது.

இதில் 38 வேட்பாளர்கள் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.