Breaking News
எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே துப்பாக்கி சூட்டை தொடங்கிய பாகிஸ்தான்; இந்தியா பதிலடி!
,

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு மூன்று நாட்களுக்குப் பிறகு, இரவு முழுவதும் பாகிஸ்தான் ராணுவத்தால் கட்டுப்பாட்டுக் கோட்டில் (LoC) பல பாகிஸ்தான் நிலைகளில் இருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது சமீப காலங்களில் இல்லாத அசாதாரண நிகழ்வு என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்துள்ளது எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த துப்பாக்கி சூட்டில் இந்திய தரப்பில் எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
"எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக ஆயுதங்களால் சுட்டது. எங்கள் படையினரும் பதிலடி கொடுத்தனர். மேலும் விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன. உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை" என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.