Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சம்மாந்துறையில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்!

.

சம்மாந்துறை, மாவடிப்பள்ளி பகுதியில் மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் வாகனம் வெள்ளம் காரணமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் காணாமல் போன 06 மாணவர்களை மீட்கும் பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (26) மாலை காரைத்தீவு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் பகுதியில் அமைந்துள்ள மத்ரஷா ஒன்றிலிருந்து சம்மாந்துறைக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற டிராக்டரானது வெள்ளத்தால் மாவடிப்பள்ளி பாலத்திற்கு அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதன்போது, டிராக்டர் வாகனத்தின் சாரதியும் அவரது உதவியாளரும் மற்றும் 11 மாணவர்களும் பயணித்துள்ளனர்.

அவர்களில் 05 மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.

அதேநேரம், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் காணாமல் போன 06 மாணவர்களையும், டிராக்டர் வாகனத்தின் சாரதி மற்றும் அவரது உதவியாளரையும் தேடும் பணிகளில் பொலிஸாரும், இலங்கை கடற்படையினரும் ஈடுபட்டுள்ளதாக காரைத்தீவு பொலிஸார் உறுதிபடுத்தியுள்ளனர்.

காணாமல் போன மாணவர்கள் சம்மாந்துறையை வசிப்பிடமாகக் கொண்ட 12 தொடக்கம் 16 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.