வடமாகாண நீர்வளத்தின் எதிர்காலம் - கூட்டாகச் சிந்தித்து செயற்படுவதே அவசியமானது!
திட்டமிட்டு சரியான அரச அலகுகளின் உதவியைப் பெற்றுச் செய்யும் திட்டமிடல் முயற்சியில் நாங்கள் பின்தங்கியவர்களாகத் தான் இருக்கிறோம்.
எங்களிடம் இருக்கின்ற ஊர் சார்ந்த, நிலம் சார்ந்த அறிவை அதற்குரிய மதிப்பைக் கொடுத்து நாங்கள் கௌரவமாக நடந்து கொள்வோமானால் எல்லாத் தீர்வுகளும் எம்முடைய கையில் தான் இருக்கின்றன. எங்களுடைய பலம் கூட்டுப் பலமாக இருந்தால், துறைசார்ந்த அறிவும், மக்களினுடைய அறிவும் ஒன்றாகத் திரளும் போது அதனுடைய வலு மிகவும் முக்கியமானது என்பதனை நான் எந்த இடத்திலும் அடித்துக் கூறத் தயாராக இருக்கிறேன்.
நீரைப் பற்றிய தெளிவான ஆய்வின் அடிப்படையில், அறிவைத் திரட்டியதன் அடிப்படையில் இன்னவற்றை செய்யலாம், இன்னவற்றை செய்யக்கூடாது எனத் தெளிவாக மக்களுக்கு சொல்லக் கூடிய ஒரு துணிவை எங்கள் அணியினருக்கு தந்திருக்கிறது.
தீவுப்பகுதியின் நீர் வளத்தை அந்தப் பகுதி மக்கள் தான் நன்கறிந்தவர்கள், தீவுப் பகுதியின் நீர் நெருக்கடியை உணர்ந்து, வாழ்ந்து, தலைமுறை தலைமுறையாக கையாண்டவர்கள் அதே பிரதேசத்து மக்கள். ஆகவே நீர்வளம் சார்ந்து எடுக்கின்ற முடிவுகளை, நேரத்தோடு ஆயத்தமாகி கூட்டாகத் திட்டமிட்டு சரியான அரச அலகுகளின் உதவியைப் பெற்றுச் செய்யும் திட்டமிடல் முயற்சியில் நாங்கள் பின்தங்கியவர்களாகத் தான் இருக்கிறோம்.
மழை வருவதற்கு இரண்டு கிழமைகளுக்கு முன்னர் கிடைத்த நிதியைக் கொண்டு செய்ய வேண்டும் என ஓடித் திரிந்து தவறாக செய்வதனை விட அடுத்த ஆண்டு வரை காத்திருந்து இன்னும் திறமையாகச் செய்வது அந்தக் குளத்தை இன்னும் சரியாக நிலைப்படுத்தும்.
வடமாகாண நீர்வளம் சந்தித்து வருகின்ற சவால்கள், நீர்வள மேம்பாடு, நீர்வள பாதுகாப்பு அதன் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு கருத்துகளையும் பகிர்ந்து கொண்டார் நீரியல் ஆய்வாளரும், சுவீடன் பல்கலைக்கழகத்தின் ஓய்வுநிலை பேராசிரியருமான ந. சிறீஸ்கந்தராஜா.


