Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை மீளப்பெற புதிய சட்டங்கள்; அரசாங்கம் அறிவிப்பு

.

கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறும் நோக்கில் 03 புதிய சட்டமூலங்கள் அடுத்த காலாண்டின் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இன்றைய (04) நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

இதன்படி, குற்றச் செயல்கள் தொடர்பான சட்டமூலம், மீட்பு, புனர்வாழ்வு மற்றும் வங்குரோத்து சட்டமூலம் மற்றும் கணக்காய்வு சட்டமூலத்திற்கான திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர்,

“கொள்ளையிடப்பட்ட சொத்துக்களை மீளப்பெறுதல், நிதிமோசடி மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை திறம்பட தடுக்கும் நோக்கில் இந்த சட்டங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

கணக்காய்வு சட்டத்தின் திருத்தங்கள் கடனாளிகளின் நம்பிக்கையை மேம்படுத்துவதுடன் அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும்” என அமைச்சர் மேலும் கூறினார்.