Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது

ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான அவன் தான் மனிதன் படத்தில் இந்தப் பாடல் வருகிறது.

ஒரே பாடலில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், தியாக உணர்வு என எல்லாவற்றையும் ஒரே பாடலில் தர முடியுமா என்றால் முடியும் என நிரூபித்து இருக்கிறது இந்தப் பாடல்.
 
ஏ.சி.திருலோகசந்தரின் இயக்கத்தில், எம்எஸ்.விஸ்வநாதன் இசையில் வெளியான அவன் தான் மனிதன் படத்தில் இந்தப் பாடல் வருகிறது. நடிகர் திலகம் சிவாஜி நடித்த சூப்பர்ஹிட் படம். கவியரசர் கண்ணதாசன் எழுதி, டி.எம்.சௌந்தராஜன் பாடியுள்ளார். ஆட்டுவித்தால் யாரொருவர், ஆடாதாரே கண்ணா என்ற பாடல் தான் அது.
கண்ணதாசனின் அலுவலகத்தில் இந்தப் பாட்டுக்கான மெட்டு போட ஏற்பாடு நடக்கிறது. பல்லவிக்கான சூழலை ஏ.சி.திருலோகசந்தர் கண்ணதாசனிடம் விளக்குகிறார்.
அது கிருஷ்ண ஜெயந்தி நேரம். கிருஷ்ணர் வேடம் போட்ட குழந்தை கையில் பொம்மையுடன் சிவாஜி அருகில் வந்து அந்தப் பொம்மையை ஆட்டுகிறது. பெரியப்பா இப்ப ஒரு பாட்டுப் பாடுங்க பெரியப்பா என கேட்கிறது. இந்த சூழலுக்குப் பல்லவி போடுங்க கவிஞரே என கேட்கிறார் ஏ.சி.திருலோகசந்தர். எம்.எஸ்.விஸ்வநாதன் ஆர்மோனியத்துடன் தயாராக உள்ளார். உடனே ஆடும் இந்த பொம்மை, அசையும் இந்த பொம்மை.
ஆடினாலும், அசைந்தாலும் தலைநிமிரும் பொம்மை என்று பல்லவி எழுத, இயக்குனர் நல்லாருக்கு. இன்னும் கொஞ்சம் நல்ல வரி வேணுமே என சொல்கிறார். இதைப் புரிந்து கொண்ட கவியரசர் அவன் ஆடச்சொன்னான். நான் ஆடுகின்றேன். .இந்தப் பொம்மையைப் போல என பாட்டின் அடுத்த வரிகளைப் போடுகிறார். அடுத்து இயக்குனர் இன்னும் கொஞ்சம் எதிர்பார்க்கிறேன் என்று சொல்ல,
இதைப் புரிந்து கொண்டார் கண்ணதாசன். இப்போது பொம்மையை விட்டு விட்டு ஆட்டுவித்தால் யாரொடுவர் ஆடாதாரே, அவன் செயலை அனுபவித்துக் காணாதாரேன்னு போட்டாராம். அப்போது மெல்லிசை மன்னர் அண்ணே உங்க முத்திரை இன்னும் விழலை அண்ணே… இன்னும் நச்சுன்னு விழுகற மாதிரி பண்ணுங்கண்ணேன்னு சொல்லி இந்தாங்கண்ணே டியூனுன்னு ஆர்மோனியத்தில் போடுகிறார்.
அப்போது கவியரசருக்கு பொறி தட்டுகிறது. திருநாவுக்கரசர் சிவபெருமானைப் பார்த்து ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே, அடங்குவித்தால் யாரொருவர் அடங்காதாரே… பாட்டுவித்தால் யாரொருவர் பாடாதாரே, பணிவித்தால் யாரொருவர் பணியாதாரேன்னு அழகாக எழுதியிருப்பார்.
அதில் வரும் ரே ரே என்பதை அப்படியே எடுத்துக்கொண்டு, ஆட்டுவித்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா, ஆசை எனும் தொட்டிலிலே ஆடாதாரே கண்ணான்னு பல்லவியைப் போடுகிறார். இந்தப் பாடலில் அவரது அனுபவத்தையும் இப்படி எழுதியிருப்பார். நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு. நண்பனிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலேன்னு அழகாக சொல்லியிருப்பார். இதுதான் படத்தோட மொத்த மையக்கருத்து.
முதலில் இந்தப் பாடலில் சந்தூர் பெல் வரும். அது கம்பீரம். அடுத்து இந்தியன் கிட்டார் இசை தன்னிரக்கத்தைக் கொண்டு வரும். அடுத்து வரும் சோகத்தைப் புல்லாங்குழல் சொல்லும். முதலில் டிஎம்எஸ் இந்தப் பாடலில் ஆட்டுவித்தால் என தன் குரலில் கம்பீரத்தைக் கொண்டு வருவார். அடுத்து நீ நடத்தும் நாடகத்தில் நானும் உண்டு என சொல்லும்போது லேசாகக் குழைவார். அடுத்து என் நிழலில் கூட அனுபவத்தின் சோகம் உண்டு என பாடும்போது தழுதழுத்து விடுவார்.
பகைவர்களை நானும் வெல்வேன் அறிவினாலே எனப் பாடும் போது சின்ன கம்பீரம் வரும். அழுகிற மன நிலையில் நண்பரிடம் தோற்றுவிட்டேன் பாசத்தாலே என அவர் அழகாக தன் பணியை முடித்திருப்பார் நடிகர் திலகம் சிவாஜியும் தன் முகபாவத்தில் கம்பீரம், சோகம், தன்னிரக்கம், அழுகை என அழகாகக் கொண்டு வந்து இருப்பார்.
மேற்கண்ட தகவலை பிரபல யூடியூபரும், திரை ஆய்வாளருமான ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.