Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும்- எம்.பி மனோ கணேசன்!

,

யாழ். செம்மணி மனித புதைகுழி ஈழத் தமிழர்கள் எதிர்கொண்ட அவலத்தின் அடையாளமாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தனியார் வானொலியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

இராணுவம் – அரச பயங்கரவாதம் – பேரினவாத அடக்குமுறை – ஏதேச்சாதிகாரம், போர் வெற்றி என்பவற்றால் நடந்ததுதான் செம்மணி புதைகுழி. அங்கே இருப்பது நம்மவர்களின் எலும்புக்கூடுகள்.

அப்பாவி மக்களை கொலை செய்வது, பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்துவது போன்ற செயல்கள் ஏற்கமுடியாதவை. இவைதான் மனித உரிமை மீறல். இதனை அமைச்சர் சந்திரசேகரன் மறந்துவிடக்கூடாது.

இனப்பிரச்சினை காரணமாகவே போர் நடந்தது. அதிகாரப் பகிர்வுக்காக தந்தை செல்வா முதல் பிரபாகரன்வரை போராட்டம் நடைபெற்றது. தற்போதும் அப்போராட்டம் இழுபட்டு செல்கின்றது.

யுத்தம் முடிந்தாலும் – யுத்தம் ஏற்படுவதற்கு வழிசமைத்த பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. எனவே, அதிகாரப்பகிர்வின் அவசியத்துவத்தை அநுர, ரில்வின் சில்வாவிடம் சந்திரசேகரன் எடுத்துரைக்க வேண்டும் – என்று மனோ கணேசன் எம்.பி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.