Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஹரினி அமரசூரியவை, சந்தித்துக் கலந்துரையாடிய இந்திய உயர்ஸ்தானிகர்!

.

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரியவை, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினர் பெற்றுக்கொண்ட வெற்றிக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அத்துடன் இலங்கை மற்றும் இந்திய இருதரப்பு முன்னெடுப்புகள் தொடர்பாகவும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் தெளிவு படுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.

தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தில் கலாநிதி ஹரினி அமரசூரியவுக்கு பிரதமர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகரின் இந்த சந்திப்பு பேசுபொருளாக அமைந்துள்ளது.

இதேவேளை, பிரதமர் பதவியை ஏற்பது தொடர்பில், ஹரினி அமரசூரியவிடம் நேற்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இன்னும் அது தொடர்பில் எவ்வித தீர்மானமும் எட்டப்படவில்லை எனக் குறிப்பிட்டார்.