Breaking News
யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழி - 446 மனித எலும்புக்கூடுகள்! செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது!

பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை

நீரின்றி தவிக்கும் நுவரெலியா – லவர்ஸ்லீப் விநாயகபுரம் மக்கள்.

நுவரெலியா மாநகர சபைக்கு உட்பட்ட லவர்ஸ்லீப் விநாயகபுரம் மக்கள் கடந்த 21 நாட்களாக நீரின்றி பெரும் அசௌகரியங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

இதனால் மக்கள் அன்றாடம் நீரின்றி தமது கடமைகளை செய்வதில் இன்னல்களை சந்திக்கின்றனர்.பொதுவாக பாடசாலை செல்லக்கூடிய மாணவர்கள் தமது பாடசாலை சீருடைய கழுவுவதற்கு கூட நீரின்றி பாடசாலைக்கு செல்லாமல் நீர் தேடி அலையும் ஒரு துர்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அதேபோல் நுவரெலியா மாநகர சபைக்கு அன்மித்த பகுதிகளில் இவ்வாறான நிலைமையை காணப்படுகிறது. தொடர்ச்சியாக நுவரெலியாவில் கடும் வெப்பமான காலனிலை காணப்படுவதால் விவசாய நடவடிக்கையும் பாதிப்படைந்துள்ளது.

பெண்கள் தமது வீட்டு வேலைகளை செய்வதற்கு கூட தண்ணீர் இன்றி பெரும் சிரமங்களுக்கு முகங் கொடுத்துள்ளனர்.

இது தொடர்பாக பல்வேறு சந்தர்ப்பங்களில் நுவரெலியா மாநகர சபை ஆணையாளருக்கு தெரிவித்திருந்த பொழுதும் இதுவரை அதற்கான நடவடிக்கையில் எடுக்கவில்லை என இம்மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.