Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

யாருக்கு ஆதரவு? தமிழரசு கட்சியின் ஆரம்பக்கட்ட தீர்மானம்; வெளியானது முக்கிய அறிவிப்பு

.

இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இந்த மாதம் இரண்டு தடவைகள் நடைபெற்ற போதும், ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பது குறித்த இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், எதிர்வரும் நாட்களில் அதன் மத்திய செயற்குழு கூட்டம் மீண்டும் கூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதன் போது, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பான ‘ஆரம்பக்கட்ட தீர்மானம் ‘ ஒன்றை எடுத்து அறிவிப்பது தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆராயவுள்ளது.

அடுத்த மாதம் முதல்வாரத்தில் அஞ்சல் மூல வாக்களிப்புகள் இடம்பெறவுள்ள நிலையில், இலங்கைத் தமிழரசு கட்சி தமது தீர்மானத்தை அதற்கு முன்னர் அறிவிப்பதே உசிதமானது என அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதுதொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கருத்துத் தெரிவிக்கையில், அந்தவிடயத்தில் தாங்களும் கரிசனைக் கொண்டிருப்பதாகவும், இதுகுறித்த ஆரம்பக்கட்ட தீர்மானம் ஒன்றையேனும் எடுக்கும் பொருட்டு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தைக் கூட்டவேண்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.