Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கைக்கு சுற்றுலா வந்த அவுஸ்திரேலிய பயணி பரிதாப மரணம்!

.

பலாங்கொடை  - நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர், பள்ளத்தில் தவறி வீழ்ந்து உயிரிழந்ததாக சமனலவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் அவுஸ்திரேலியாவைச்  சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

அவுஸ்திரேலியாவிலிருந்து 18 பேர் கொண்ட சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று கடந்த 10 ஆம் திகதி  இலங்கை வந்துள்ளது.

அவர்கள் நேற்றைய தினம்  நன்பேரியல் சுற்றுலா தளத்தைப் பார்வையிடச் சென்றிருந்த வேளையில்,

குறித்த அவுஸ்திரேலியா பிரஜை தவறி வீழ்ந்து காயமடைந்த நிலையில் உயிரிழந்ததாக    விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, நன்பேரியல் சுற்றுலாத் தலத்தைப் பார்வையிட செல்லும் சுற்றுலா பயணிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு பலாங்கொடை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பனிமூட்டமான வானிலை காணப்படுவதால் விபத்துக்கள் அதிகம் வாய்ப்புள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.