Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்.

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் அரிசி சிறுவர்களின் நுகர்வுக்கு தகாதது.

உலக உணவுத் திட்டத்தின் மீது அரசாங்கம் குற்றச்சாட்டு: மாணவர்களுக்கு தரமற்ற அரிசி வழங்கியமைக்கு அமைச்சர் விளக்கம்.

பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் சிறுவர்களின் நுகர்வுக்கு தகாத அரிசியானது உலக உணவுத் திட்டத்தினால் (World Food Programme – WFP) வழங்கப்பட்டதே தவிர, அரசாங்கத்தினால் வழங்கப்படவில்லை என கல்வியமைச்சர் சுசில் பிரேமஜெயந்த கூறியுள்ளார்.

இன்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்துக்கு உதவும் வகையில், குறித்த அரிசிப் பொதிகள் உலக உணவுத் திட்டத்தினால் மேலதிகமாக வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், அரச நிதியில் விநியோகிக்கப்படும் உணவு குழந்தைகள் உண்பதற்கு ஏற்றது என்பதை அரசு உறுதி செய்கிறது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினூடாக கல்வி நிலையங்களுக்கு அரிசி கையிருப்புக்காக வழங்கப்பட்ட பின்னரும் மாகாண பொது சுகாதார பரிசோதகர்களினால் (Provincial Public Health Imspectors – PHIS) வழக்கமான தர பரிசோதனைகள் செய்யும்படி ஆலோசனை வழங்குவதாக அமைச்சர் பிரேமஜெயந்த தெரிவித்தார்.

அரசாங்கமானது, ஒவ்வொரு பிள்ளைக்கும் ரூபாய் 110 வீதம் ஒதுக்குகிறது. அதுமட்டுமில்லாமல் வேறு ஆதாரங்களிலுமிருந்தும் நிதி கிடைக்கப் பெறுகிறது.

இதன் விளைவாக, உலக உணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் அரிசியுடன் அரசாங்கத்தின் நிதியுதவியில் கிடைக்கும் அரிசியை கலக்க வேண்டாம் என அமைச்சர் உத்தரவிட்டார்