Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜே.வி.பி எதிர்த்தது போல் நாங்கள் எல்லாவற்றையும் எதிர்க்க மாட்டோம்

.

பொறுப்புள்ள எதிர்க்கட்சி என்ற வகையில் தற்போதைய அரசாங்கத்தின் ஜனரஞ்சக வேலைத் திட்டங்களுக்கு தேவையான ஆதரவை வழங்குவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ கண்டியில் வைத்து தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை ஸ்ரீ தலதா மாளிகைக்கு சென்று அங்கு இடம்பெற்ற வழிபாட்டில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியதாவது:

அமைச்சரவை அமைச்சர்களின் பதவிகளை மட்டுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கையாகும். இந்த அடிப்படையில் அரசாங்கத்தில் உள்பிரச்சினைகள் ஏற்படும் போது புதிய அமைச்சுப் பதவிகளை உருவாக்காமல் அதே நிலைமைகளை கடைப்பிடித்தால் நல்லது.

எதிர்க்கட்சியில் இணைந்து செயல்பட கூடியவர்கள் உள்ளனர். இதற்கு முன்னர் எமது குழுவை பிரதிநிதித்துவப்படுத்திய ரோஹித, அனுராதா, சாமர போன்றவர்கள் பாராளுமன்ற ஆணைகளை பெற்றுள்ளனர்.

அப்போது அரசாங்கம் செய்த அனைத்தையும் ஜே.வி.பி எதிர்த்தது.

ஆனால், நாங்கள் அப்படி எதிர்ப்பது போல் நடந்து கொள்ளவில்லை. மக்கள் அங்கும் இங்கும் தாவித் தாவி மாறி மாறி வாக்களித்த முறை மாறி இம்முறை வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது. எனவே எம்மை விட்டுப் பிரிந்து பாராளுமன்ற ஆணையைப் பெற்றவர்களை மீண்டும் எம்முடன் இணைத்துக் கொள்வதற்கு நாங்கள் அவசரப்பட வேண்டியதில்லை. இணைந்து செயல்பட அது ஒரு தடையல்ல என்றும் வலியுறுத்தினார்

கடந்த காலங்களில் கட்சி சில பின்னடைவை சந்தித்தது. மற்றும் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திலான அரசியல் சூழலை சரியாக கண்காணித்து கட்சியில் தேவையான மாற்றங்கள் ஏற்படும்.

பொதுத் தேர்தலில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இடங்களின் குறைந்த வாக்குகள் மூலம் தவறவிட்டோம். மகிந்த ராஜபக்ச ஒரு தொழில்முறை அரசியல்வாதி. அப்படிப்பட்டவர் அரசியலை விட்டு விலக முடியாது. சந்திரிகா, ரணில், மைத்திரி கூட அப்படித்தான். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பது இனவாதமற்ற தேசியவாதக் கட்சியாகும் எனவும் தெரிவித்தார்.