Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து தலைவர்கள்: ஒரே சித்தாந்தத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள்

.

நல்லாட்சி அரசாங்கத்தின் ஐந்து தலைவர்கள், இந்த வருடம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

”ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, சரத் பொன்சேகா ஆகியோர் நல்லாட்சி அரசாங்கத்தின் வலிமையானவர்கள்.

இவர்கள் ஐவருக்கும் பொதுவான காரணி ஒன்று உள்ளது. இவர்கள் நல்லாட்சியின் தலைவர்கள். ஏனெனில் அனுரகுமார திஸாநாயக்க நல்லாட்சி அரசாங்கத்தின் ஊழல் எதிர்ப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கின்றார். இன்றும் ஜனாதிபதியும் அனுரகுமார திஸாநாயக்கவும் எங்களிடம் பைல் (கோப்பு)இருக்கிறது என்று இரு பக்கங்களும் வாசிக்கிறார்கள்.

விஜயதாச ராஜபக்ச அவர்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர். சரத் பொன்சேகா நல்லாட்சி அரசாங்கத்தின் வனவிலங்கு மற்றும் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர். சஜித் பிரேமதாச நல்லாட்சி அரசாங்கத்தின் வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சராக இருந்தார்.

ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர். இந்த ஐவரும் ஒன்றிணைந்து அறுபத்தொன்பது இலட்சம் மக்களை தோற்கடித்த நல்லாட்சி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

இவர்கள் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தாலும், அவர்கள் ஒரே சித்தாந்தத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறார்கள். இவர்களில் ஒருவர் அடுத்த ஜனாதிபதியாக வேண்டும் என்றால், 2019 ஆண்டில் 69 லட்சம் மக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்தை தோற்கடித்தமை வீணடிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறெனில் தொடர்ந்தும் அவர்களையே ஆட்சிபுரிய வைத்திருக்கலாம்” என்றார்.