Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எமது கட்சிக்கு முதன்முதலில் ஆயுதங்களை வழங்கிய ஜே.வி.பி.யினரே மக்களை சுட ஆயுதங்களை கேட்டனர் ; நாங்கள் கொடுக்கவில்லை

.

 

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு முதன்முதல் ஆயுதங்களை தந்தனர், ஜே.வி.பி கட்சியினர். பின்னர், மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஜே.வி.பி.யினர் ஆயுதங்களை கேட்டனர். நாங்கள் கொடுக்கவில்லை என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சித் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் என்கிற பிள்ளையான் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் கிழக்கு மாகாண ஆளநர் இல்லத்தில் வெள்ளிக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனிடம், பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக அநுரகுமார திசாநாயக்க (27) மட்டக்களப்பில் நடந்த கூட்டமொன்றில் கருத்து தெரிவித்தமை தொடர்பாக கேட்டபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

அநுரகுமார திசாநாயக்கவுக்கு மண்டை பழுது. அவர்கள்தான் எங்களுக்கு முதலில் ஆயுதங்களை தந்தார்கள். பின்னர், மக்களை சுடுவதற்கு எங்களிடம் ஆயுதம் கேட்டார்கள். நாங்கள் கொடுக்கவில்லை. அப்போது வேறு ஆட்கள் தலைவராக இருந்தனர்.

பிள்ளையான் மக்களை அச்சுறுத்துவதாக இருந்தால், மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆகக்கூடிய வாக்குகளை பெற்றது யார்? எனவே, ஜனநாயகத்தை பற்றி கதைப்பது என்றால் அநுர குமார திசாநாயக்க யோசித்து பொறுப்பான தலைவராக கதைக்க பழகவேண்டும்.

அதேவேளை, இந்த நாட்டை தீக்குள் தள்ளி அநியாயமாக பல்கலைக்கழக மாணவர்களை கொண்டுசென்று வன்முறையில் ஈடுபடுத்தும் கட்சி அது.

இந்த நாட்டை அழிக்க நினைக்கின்ற தலைவர் எங்கள் மண்ணில் வந்து பேசியதையிட்டு கவலையடைகின்றேன். அவர்கள்தான், ஒரு பிரபல்யமான ஆயுத குழு. தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆயுதம் தந்தவர்களும் அவர்கள்தான். பின்னர் அதனை கைமாற்றியதும் அவர்கள்தான். எனவே அந்த ஆயுதங்களை தேடி எடுப்பதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறு அநுரகுமார திசாநாயக்கவுக்கு தெரிவிக்கின்றேன் என்றார்.