Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

சந்திரிக்கா தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைகின்றதா?:

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பிரகடனத்தை அம்பாரையில் முன்வைத்து உரையாற்றிய சஜித் பிரேமதாச சூட்சகமாகத் தெரிவித்தார்.

சந்திரிக்கா தலைமையிலான அணி ஐக்கிய மக்கள் சக்தியில் இணைகின்றதா?:

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அணியினர் ஐக்கிய மக்கள் சகத்தியில் இணையவுள்ளதாக அந்தக் கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச சூட்சகமாகத் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயிகள் பிரகடனத்தை அம்பாரையில் முன்வைத்து உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

அம்பாறை சேனநாயக்க சமுத்திர குளத்திற்கு டி.எஸ்.சேனாநாயக்க நடவடிக்கை எடுத்து பாரிய நீர்ப்பாசன நாகரீகத்தை கட்டியெழுப்பியிருந்தார்.

அதேபோல், டட்லி சேனாநாயக்க படல்கம நீர்த்தேக்கம், அம்பலன் ஓயா, லொக்கல் ஓயா மற்றும் பல்லம் ஓயா போன்றவற்றை உருவாக்கினார்.

அம்பாறை நாமல் ஓயா திட்டத்தை சிறிமாவோ பண்டாரநாயக்க அமுல்படுத்தினார். அனைத்து வளங்களையும் பல்தேசிய நிறுவனங்களுக்கு விற்கும் கட்சியாக எமது கட்சி இருக்காது.

ஆனால் நாட்டின் தலைமைக்கு மாற்றாக தம்மைக் கூறிக்கொள்ளும் சோசலிச தலைவர்கள் என அழைக்கப்படுபவர்களும் தேசிய சொத்துகளை விற்க இணங்கியுள்ளனர்.

விவசாயம் தொடர்பான அனைத்து நிறுவனங்களான காணி, நில அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி போன்ற அனைத்து நிறுவனங்களும் தமது அரசாங்கத்தின் கீழ் ஒரே அமைச்சின் கீழ் கொண்டு வரப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.