மக்கள் திலகமான எம்ஜிஆர் அவர்களின் 109வது பிறந்த தினம் 17 சனிக்கிழமை மாலை பாசையூரில் கொண்டாடப்பட்டது.
எம் ஜி ஆர் அவர்களுக்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ்ப்பாணம் மாநகர சபையின் முன்னாள் மேயர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் எம்ஜிஆர் அவர்களின் 109 வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது.
எம்ஜிஆர் அவர்களின் 10 அடி சிலைக்கு மலர் மாலை அணிவித்து வணக்கம் செலுத்தப்பட்டது.
இதன் போது எம்ஜிஆர் அவர்களின் வயதை ஒத்த 109 பேருக்கு தலா 3, 000 ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
அதேபோல் 50 வறிய குடும்பங்களுக்கு தலா 5, 000 ரூபாய் உலர் உணவுப் பொருட்களும், 300 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களும் வழங்கி வைக்கப்பட்டது.
1987 ஆம் ஆண்டு மக்கள் திலகம் எம்ஜிஆர் அவர்கள் இயற்கை எய்திய பின்னர் 1988 ஆம் ஆண்டு எம் ஜி ஆர் அவர்களுக்காக யாழ்ப்பாணம் பாசையூரில் எம்ஜிஆர் நற்பணி மன்றத்தினால் எம்ஜிஆர் அவர்களின் நினைவு சிலை அமைக்கப்பட்டது.
மக்கள் நாயகன் எம் ஜி ஆர் அவர்களுக்காக இலங்கையில் உருவாக்கப்பட்ட முதலாவது சிலை இது என்பது குறிப்பிடத்தக்கது.
109 வது பிறந்த தின நிகழ்வுக்கு ஐரோப்பிய தமிழர் எம்ஜிஆர் நற்பணி மன்றம் பிரான்ஸ், மக்கள் படை பிரான்ஸ் ஆகியன நிதி உதவி வழங்கியிருந்தனர்.


