ஜே.வி.பி ரில்வின் சில்வாவை சந்தித்தார் கியூபா தூதுவர்
,
ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கியூபாவின் புதிய தூதுவர் பட்ரிசியா பெகோ குவேரா (Patricia Pego Guerra) ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு செவ்வாய்க்கிழமை (03) முற்பகல் பெலவத்தையிலுள்ள ஜே.வி.பி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, இலங்கை மற்றும் கியூபா நாடுகளுக்கு இடையிலான நட்புறவை வலுப்படுத்துதல், கியூபா கம்யூனிஸ்ட் கட்சிக்கும் ஜே.வி.பி க்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் வளர்த்தெடுத்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இலங்கையின் சுகாதாரம், கல்வி, விளையாட்டு மற்றும் இடர் மேலாண்மை ஆகிய துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கியூபா தூதுவர் இதன்போது கருத்து வெளியிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டது. இதன்போது, ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா, புதிய தூதுவரின் இலங்கையுடனான இராஜதந்திர பணிகள் வெற்றியளிக்க வாழ்த்துகளைத் தெரிவித்தார்.


