Article 9 "இலங்கை குடியரசானது பௌத்த மதத்திற்கு முதலிடம் அளிப்பதுடன், அதற்கிணங்க, புத்த சாசனத்தைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது அரசின் கடமையாகும்,"
அனுரகுமார இனி என்ன செய்ய வேண்டும்..? புதிய வரலாறு படைப்பாரா?
உலகில் வேறெங்கும் இல்லாத ஒரு நூதனமான கடமை இலங்கை ஜனாதிபதிமாருக்கு உண்டு. எவர் ஜனாதிபதியாக வந்தாலும் அவர் “பௌத்த மதத்தின் காவலனாக” இருக்க வேண்டும் என்பதே அது.
இந்த அரியவகை கடமையை, அரசியல் அமைப்பின் Article 9 பின்வருமாறு வலியுறுத்துகிறது.
"இலங்கை குடியரசானது பௌத்த மதத்திற்கு முதலிடம் அளிப்பதுடன், அதற்கிணங்க, புத்த சாசனத்தைப் பாதுகாத்துப் பேணி வளர்ப்பது அரசின் கடமையாகும்,"
இதுதான் அது. இதை வைத்துக்கொண்டுதான் எல்லாவற்றையும் செய்கிறார்கள். இரவிரவாக புத்தர் சிலைகளை கொண்டுவருகிறார்கள். பொலீஸ்காரரையே காவ வைக்கிறார்கள்.
எனவே ஜனாதிபதி அனுர இதை மாற்றவேண்டும். அவர் கொண்டுவர இருக்கும் புதிய அரசியல் அமைப்பில் இந்த வசனமே இருக்கக்கூடாது.
எப்படி மஹிந்த வீட்டைவிட்டு வெளியேற மாட்டேன் என அடம்பிடித்தபோது, அதற்கு ஒரு சட்டத்தை இயற்றி ( Presidents’ Entitlements Repeal Bill ), பாராளுமன்றத்தில் நிறைவேற்றி, அவரை ‘ஓட்டமெட்டிக்காக’ வீட்டைவிட்டு எழுப்பினாரோ,
அதேமாதிரி, இதற்கும் ஒரு சட்டத்தை இயற்றி பிக்குமாருக்கு இருக்கும் தேவையில்லாத அதிகாரங்களை நீக்கவேண்டும். அப்பத்தான் நாடு உருப்படும்.
செய்வாரா..?


