Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

இலங்கையில் சிக்கன நடவடிக்கையால் ஏழைகள் பாதிப்பு: ஐநா மனித உரிமைகள் ஆணையர் கவலை

.

 

இலங்கையில் சிக்கன நடவடிக்கைகளின் தாக்கம் குறித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டர்க் கவலை வெளியிட்டுள்ளார்.

மனித உரிமைகள் பேரவையின் 56வது அமர்வில் கலந்துகொண்டு உலகளாவிய ரீதியிலான புதுப்பிப்புகளை வழங்கி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த மூன்று தசாப்தங்களில் உலகளவில் சமத்துவமின்மையில் பாரிய இடைவெளி ஏற்பட்டுள்ளதாக” குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் கோவிட் தொற்றின் போது செல்வந்த நாடுகளை விட ஏழ்மையான நாடுகள் கடுமையான பொருளாதார பாதிப்புகளை சந்தித்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்த வகையில், 2019ஆம் ஆண்டில் இருந்ததை விட 4.8 பில்லியன் மக்கள் ஏழைகளாக உள்ளனர் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், உலகளவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான செல்வ இடைவெளி 100 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் ஐநா ஆணையாளர் டர்க் கூறியுள்ளார்.

இதனிடையே, இலங்கையின் மேக்ரோ பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ள நிலையில், பொருளாதார நெருக்கடியின் தாக்கங்களும், அதனுடன் தொடர்புடைய சிக்கன நடவடிக்கைகளும் ஏழ்மையான மக்களை அதிகம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், 2021 மற்றும் 2023 க்கு இடையில், வறுமை விகிதம் 13.1 முதல் 25.9 சதவிகிதம் வரை இரட்டிப்பாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஆக்ஸ்பாமின் கூற்றுப்படி, இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து உலகின் ஐந்து பணக்கார பில்லியனர்களின் செல்வம் இரட்டிப்பாகியுள்ளதுடன், மனிதகுலத்தில் 60 சதவீதம் பேர் ஏழைகளாக மாறியுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.