Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

புலம்பெயர்ந்தோருக்கு எதிர்ப்பு; லண்டனில் பாரிய ஆர்ப்பாட்டம்!

.

பிரித்தானியாவில், புலம்பெயர்ந்தோருக்கு எதிரான வலதுசாரி போராட்டக்காரர்கள் லண்டனில் இடம்பெற்ற போராட்டங்களில் இணைந்து கொண்டனர்.

பிரித்தானிய குடிவரவுச் சட்டங்கள் தளர்த்தப்படுவதற்கும் இனவாதத்தை ஒழிப்பதற்கும் எதிராக இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இதனையடுத்து நகரம் முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, “அகதிகளை வரவேற்கிறோம்”, “வலதுசாரிகளை குப்பையில் போடுங்கள்” என்ற முழக்கங்களுடன், தீவிர வலதுசாரிகளுக்கு எதிராக லண்டனில் மற்றுமொரு குழுவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

இந்நிலையில், நகரில் பொது ஒழுங்கை பராமரிக்க அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக துணை உதவி ஆணையர் ரேச்சல் வில்லியம்ஸ் தெரிவித்தார்.

மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் எந்தவொரு செயலும் இடம்பெற வாய்ப்பில்லை எனவும், எந்தவொரு அசம்பாவிதத்தையும் எதிர்கொள்ள பாதுகாப்புப் படையினர் விழிப்புடன் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பிரித்தானியாவின் சவுத்போர்ட் பகுதியில் நடனப் பட்டறை ஒன்றில் கலந்துகொண்ட மூன்று சிறுமிகள் கடந்த ஜூலை மாதம் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர், முஸ்லிம் குடியேறி என்று சமூக ஊடகங்களில் தவறான செய்தி பரவியபோது, நாடு முழுவதும் வன்முறைகள் வெடித்திருந்தன.

எவ்வாறாயினும், நேற்றைய போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்த நபர், நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் பொலிஸ் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

அவர் இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த ஜூலை மாதம் பிரித்தானியாவை விட்டு வெளியேறிய போது தனது கைப்பேசியின் பின் (PIN) இலக்கத்தை வழங்கத் தவறியமைக்காக அவர் மீது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.