Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு. வேட்பாளர் யார், கட்சியின் ஆதரவு யாருக்கு?

ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலை

ஜனாதிபதி தேர்தலில் விமல்-உதய கம்மன்பில உருவாக்கிய கட்சியின் ஆதரவு யாருக்கு?: ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியின் புதிய நகர்வு.

ஜனாதிபதித் தேர்தலின் வேட்பாளர் யார், அல்லது கட்சியின் ஆதரவு யாருக்கு என்பது தற்போது அரசியல் களத்தில் அதிகளவில் எழுந்து வரக் கூடிய கேள்வியாகவுள்ளது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, பேராசிரியர் சன்ன ஜயசுமண உள்ளிட்டவர்களால் புதிதாக உருவாக்கப்பட்ட சர்வ ஜனபலய கட்சி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கட்சி கை விரல் ரேகையை சின்னமாகக் கொண்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தற்போது ஆதரவு அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறு சர்வ ஜனபலய என புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து ஒரு குழுவாக ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

இவ்வாறான பின்னணியில், ரணிலின் பதவிக்காலத்தை மேலும் நீட்டிக்க கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், அரசியலமைப்பு திருத்தத்தின் மூலம் மட்டுமே ஜனாதிபதியின் பதவிக் காலத்தை நீட்டிக்க முடியும் எனவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. என்ற நிலைப்பாட்டில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு அதிகமாக காணப்பட்டு வருகிறது.