Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாமலின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியீடு: பொறுமை காக்கும் அரியநேத்திரன்

.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் நாமல் ராஜபக்சவின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (02) வெளியிடப்படவுள்ளது.

இது குறித்த நிகழ்வு கொழும்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கட்சி தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச கடந்த வெள்ளிக்கிழமை தனது விஞ்ஞாபனத்தை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் கையளித்துள்ளார்.

இந்த விஞ்ஞாபனம் இலங்கையின் எதிர்காலத்திற்கான ராஜபக்சவின் தொலைநோக்குப் பார்வை மற்றும் கொள்கைகளை கோடிட்டுக் காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், முக்கிய பிரச்சினைகளை எடுத்துரைத்து தேசத்தை முன்னோக்கி நகர்த்துவதற்கான தீர்வுகளை முன்வைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, திலித் ஜயவீர ஆகியோர் தமது தேர்தல் விஞ்ஞாபனங்களை வெளியிட்டுள்ளனர்.

தமிழ்ப் பொதுவேட்பாளர் பா.அரியநேத்திரன் தனது தேர்தல் விஞ்ஞானத்தை இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தாக்கது.