Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மூன்றாக பிளவுபட்ட சுதந்திரக்கட்சி: புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்?

.

ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது மூன்று கட்சிகளாக பிளவுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மூன்று குழுக்களாக பிரிந்து மூன்று ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு உதவியமையினால் நிலைமை மோசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கலாநிதி விஜயதாச ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக முன்னிறுத்துவதற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் ஆதரவளிப்பதாகவும் அறிவித்துள்ளனர்.

இதனிடையே, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது நாளை (29) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என அந்தக் கட்சியின் உப தலைவர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.