Breaking News
கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்!

பிரான்ஸ் ஒலிம்பிக்கில் ஈழத் தமிழருக்கு கிடைத்த அரிய வாய்ப்பு: ஒலிம்பிக் தீபத்திற்கு வழங்கப்பட்ட உற்சாக வரவேற்பு.

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 

கிரீஸ் நாட்டில் இருந்து பரிஸ் மார்செய் துறைமுக நகருக்கு கொண்டு செல்லப்பட்ட ஒலிம்பிக் தீபத்திற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

கிரீஸிலிருந்து ஒலிம்பிக் தீபம் பிரான்ஸ் ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, பில்லம் என்ற பாரம்பரியமிக்க 3 அடுக்கு பாய்மர படகு மூலமாக பிரான்சுக்கு கொண்டு செல்லப்பட்டது. 12 நாட்கள் கடல் பயணத்திற்கு பிறகு ஒலிம்பிக் தீபம் பிரான்ஸின் மார்செய் நகரை சென்றடைந்தது.

அதனையடுத்து பிரான்ஸ் முழுவதும் ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் இடம்பெற்றுவரும் நிலையில் பரிஸில் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு தர்ஷன் செல்வராஜா என்ற ஈழத் தமிழருக்கு கிடைத்துள்ளது.

இவர் கடந்த வருடம் பரிஸ் நகரில் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்றதோடு, பிரான்ஸ் ஜனாதிபதியின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையையும் பெற்றுள்ளார்.

இவ்வாறான நிலையிலேயே இவருக்கு இம்முறை ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் அரிய வாய்ப்பு கிடைத்துள்ளது.

பாரிஸில் கோடைகால ஒலிம்பிக்ஸ் ஜூலை மாதம் 26 முதல் ஒகஸ்ட் மாதம் 11 திகதி வரை நடைபெறுகிறது. இதற்கு 10,500 விளையாட்டு வீரர்கள் 329 போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

இதேவேளை, பாரா ஒலிம்பிக் ஒகஸ்ட் மாதம் 28 திகதி முதல் செப்டம்பர் மாதம் 08 திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில் 549 போட்டிகளில் 4,400 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர்.

ஒலிம்பிக்கில் 206 நாடுகளும், பாரா ஒலிம்பிக்கில் 184 நாடுகளும் பங்கேற்க உள்ளன.

பாரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள் அல்லது மாற்றுத் திறனாளர் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் (Paralympic Games) என்பது உடல் குறைபாடுள்ள விளையாட்டு வீரர்கள் பங்கேற்கும் முதன்மையான பன்னாட்டு பல் விளையாட்டு போட்டிகள் ஆகும்.