Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

குஜராத் விமானநிலையத்தில் கைது பாதளஉலககுழு தலைவர் பொட்ட நவ்பரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.

மரணதண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நவ்பரின் மகன்!

குஜராத் விமானநிலையத்தில் கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் பொட்ட நவ்பரின் மகன் – அதிகாரிகள் தகவல்.

இந்தியாவின் குஜராத் விமானத்தில் ஐஎஸ் உறுப்பினர்கள் என்ற சந்தேகத்தில் கைதுசெய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் இலங்கை பாதளஉலககுழு தலைவர் பொட்ட நவ்பரின் மகன் என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்;தில் கைதுசெய்யப்பட்டவர்களில் ஒருவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியை சேர்ந்தவர் ஏனையவர்கள் கொழும்பு கிரான்ட்பாஸ் மாளிகாவத்தை மற்றும் கொழும்பு 13ஐசேர்ந்தவர்கள் என இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் 27 வயது இளைஞன் மேல்நீதிமன்ற நீதிபதி சரத் அம்பேபிட்டிய கொலை தொடர்பில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பொட்ட நவ்பரின் மகன் என  இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பாடசாலை கல்வியை கைவிட்ட பின்னர் இவர் இந்தியாவிலிருந்து ஆடைகளை கொள்வனவு செய்து இலங்கைக்கு கொண்டுவந்து விற்பனை செய்வதில் ஈடுபட்டார் என தெரியவந்துள்ளது.

2017 இல் இவர் இலங்கை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

மேலும் இவர் இந்தியா துபாய்க்கு வர்த்தக நோக்கங்களிற்காக அடிக்கடி பயணங்களை மேற்கொண்டமை விசாரணையின் போது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.