Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தமிழ் பொது வேட்பாளருக்கு மட்டு. ஆயர் பூரண ஆதரவு

.

இலங்கையில் தமிழர்கள் பூர்வீகக் குடிகள். அவர்கள் ஒரு தேசிய இனம். அவர்களுக்கு இந்த நாட்டில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் உரிமை உண்டு. தமிழர்களின் பொதுக் கட்டமைப்பு அரியநேத்திரனை தமிழ் தேசியத்தின் ஓர் அடையாளமாக தேர்ந்தெடுத்திருக்கிறது. ஆதலால் தமிழ் தேசியத்தினர் அவரை முழுமையாக ஆதரிக்க வேண்டும். இதனை உருக்கமாக முன்வைக்கின்றேனென மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் வண.ஜோசப் பொன்னையா ஆண்டகை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில்,

தமிழ் தேசியத்தினர் இதுவரை 8 சிங்களத் தலைவர்களை ஜனாதிபதி ஆக்குவதற்கு வாக்களித்துள்ளார்கள். வாக்குகளைப் பெற்று பதவியில் அமர்ந்தவர்கள் யாருமே தமிழ் தேசியத்தின் குறைகளை அல்லது கஷ்டங்களை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. அப்படி இருக்கையில் இன்னுமின்னும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று தமிழ் தேசியம் கேட்பதில் தவறேதுமில்லை.

தமிழ் தேசியம் ஒரு சிறுபான்மை இனம். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறப் போவதில்லை. ஆயினும் இவ்வளவு காலமும் ஜனாதிபதியாக இருந்த சிங்களத் தலைவர்கள் விட்ட பிழைகளை சுட்டிக்காட்டுவதற்கான ஒரு செயற்பாடே தமிழ் பொதுக் கட்டமைப்பினர் அரிய நேத்திரனை தெரிவு செய்தமைக்கான காரணமாகும்.

இந்த தமிழ் பொதுக் கட்டமைப்பினர் தமிழ் மக்களின் சகல பிரச்சினைகளிலும் கலந்து கொள்ள வேண்டும். ஒரு நல்ல தீர்க்கமான முடிவை ஒவ்வொரு விடயத்திலும் வெளிப்படையாகக் கலந்து பேசி எடுக்க வேண்டும். தமிழ் பொதுக் கட்டமைப்பினர் சிரஞ்சீவியாக நிலைத்து நிற்க வேண்டும். எமது அரசியல்வாதிகளின் கோணல் மாணல்களுக்கு முகம் கொடுத்து நல்லதைச் செய்ய வேண்டும் என ஆலோசனை கூறுகின்றேன் என்றார்.