Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஓட்டமாவடியில் இளைஞர்களுக்கான தொழிற் பயிற்சி நிலையம் திறந்து வைப்பு .

.

இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற இளைஞர் தொழில் பயிற்சி நிலையத்தின் தேசிய ரீதியான 56 வது நிலையமும் மட்டக்களப்பு மாவட்டத்தின் இரண்டாவது நிலையம் இன்று (16) ஓட்டமாவடி பொது நூலக கட்டடத்தில் திறந்து வைக்கப்பட்டது.

ஓட்டமாவடி தொழிற்பயிற்சி நிலையம் எனும் பெயரில் கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்தலால் ரத்னாயக்கவின் இணைப்பதிகாரி உமர் ஹத்தாப் அப்துல்லாஹ் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான சட்டத்தரணி சிந்தக்க பத்திரண ஆகியோரினால் உத்தியோகபூர்வமாக பிரதேச இளைஞர்களின் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.

இதன்போது, கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் ஏ.தாஹிர் அக்கீல், ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளர் எம். ஷிஹாப்தீன், மாகாண, மாவட்ட இளைஞர் சேவைகள் மறத்தின் உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

அத்துடன், இளைஞர்களை முன்னேற்றுவதற்கான இவ்வேலைத்திட்டத்தினை சமூகத்தின் தேவை எனக் கருதி பிரதேசத்திற்கு கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்ட மாவட்ட இளைஞர் சேவைகள் மன்றத்தின் சிரேஷ்ட அதிகாரி ஏ.ஹனீபா இந்நிலையத்தின் பொறுப்பதிகாரியாக மன்றத்தின் பணிப்பாளர் சிந்தக்க ஹேவா பத்திரணவினால் நியமிக்கப்பட்டார்.

இங்கு கொரியன், ஆங்கிலம் மற்றும் சிங்கள மொழிப் பயிற்சி நெறிகள், தகவல் தொடர்பாடல், அழகுக் கலை, நெசவுக் கைத்தொழில், மனித வள முகாமைத்துவ ஆகிய பயிற்சி நெறிகள் குறித்த நிலையத்தினால் கோறளைப்பற்றுப் பிரதேச இளைஞர் யுவதிகளுக்காக நடாத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.