Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

லெபனானில் போர் பதற்றம்: இலங்கையர்கள் குறித்து வெளியாக தகவல்

.

லெபனானில் வசிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்து தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டாம் என லெபனானில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள லெபனானுக்கான இலங்கைத் தூதுவர் கபில ஜயவீர, தொழிலாளர்களுடன் தூதரகம் நெருங்கிய உறவைப் பேணி வருவதாகத் தெரிவித்தார்.

தற்போது லெபனானில் உள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 7600ஐ அண்மித்துள்ளது.

இதில், கிட்டத்தட்ட 25 இலங்கைத் தொழிலாளர்கள் போர் நிலவும் தென் பிராந்தியங்களில் இருப்பதாகத் தூதுவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும், அவர்கள் அனைவரும் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், லெபனானில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் நடமாட்டத்தை மட்டுப்படுத்தவும், மக்கள் கூடும் இடங்களில் தங்குவதை தவிர்க்கவும் தூதுவர் அறிவுறுத்துகிறார்.

இலங்கையில் உள்ள அவர்களது குடும்பங்களின் உறவினர்கள் லெபனானில் உள்ள பணியாளர்களுடன் முடிந்தவரை தொடர்பு கொள்ளுமாறு தூதர் அறிவுறுத்துகிறார்.

இதேவேளை, இஸ்ரேலில் இருந்து துபாய், அபுதாபி மற்றும் புதுடில்லி ஊடாக கொழும்புக்கு வருவதற்கான விமானங்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மற்றும் இஸ்ரேலுக்கு செல்ல டிக்கெட் வைத்திருக்கும் பயணிகளிடம் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் விமான அட்டவணையில் மாற்றம் உள்ளதா என்பதை சரிபார்க்கவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.