Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்களின் அதிகரிப்பு!

,

டெங்கு மற்றும் சிக்குன்குனியா போன்ற நுளம்புகளால் பரவும் நோய்களின் அதிகரிப்பை கட்டுப்படுத்துவதற்காக தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி ஜூலை 5ஆம் திகதிவரை தொடரும் என டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது.

சமீபத்திய கனமழை மற்றும் கடந்த சில மாதங்களாக பதிவான டெங்கு நோயாளர்களின் அதிகரிப்பு காரணமாக, நுளம்பு இனப்பெருக்கம் செய்யும் இடங்களைக் கட்டுப்படுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த பிரசாரத்தின் நோக்கமாகும்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்படி, இந்த ஆண்டு இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 28,752 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளன, இதில் மேல் மாகாணத்திலேயே அதிக எண்ணிக்கையான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன், 16 உயிரிழப்புகளும் உறுதி செய்யப்பட்டுள்ளன.

ஒரு வார கால டெங்கு கட்டுப்பாட்டு வாரம் 16 மாவட்டங்களை உள்ளடக்கி, நுளம்பு பெருகுவதை கட்டுப்படுத்த 1,100 குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இதில் ஆய்வுகள், சுத்தம் செய்தல் இயக்கங்கள் மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரங்கள், குறிப்பாக சுகாதார அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்ட அதிக ஆபத்துள்ள பகுதிகளில் முன்னெடுக்கப்படும்.

தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக சுகாதார நிபுணர் பிரஷீலா சமரவீர, இந்தத் திட்டம் அதிக ஆபத்துள்ள சுகாதார மருத்துவ அதிகாரி (MOH) பிரிவுகள் மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை மையமாகக் கொண்டிருக்கும் என்று வலியுறுத்தினார்.