Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

தெலுங்கு திரையுலக பாலியல் தொல்லை அறிக்கையை வெளியிடுங்கள்: நடிகை சமந்தா வலியுறுத்தல்

.

கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கையைப் போலவே, தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பான அறிக்கையை தெலங்கானா அரசும் வெளியிட வேண்டும் என்று பிரபல நடிகை சமந்தா கோரிக்கை விடுத்துள்ளார். அவர் கோருவது என்ன இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த இந்திய சினிமா பிரபலங்களை அதிர வைத்தது அண்மையில் கேரளாவில் வெளியிடப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கை. திரைப்பட பிரபலங்களான நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது சரமாரியான புகார்கள் அந்த அறிக்கையில் கூறப்பட்டது. இந்த நிலையில் இதே பாணியில் தமிழ்நாட்டிலும் ஒரு குழு அமைக்கப்படும் என்று நடிகர் விஷால் அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கிடையே, மலையாளம், தமிழ் திரையுலகைத் தொடர்ந்து தெலுங்கு திரையுலகிலும் பாலியல் சீண்டல்கள் குறித்த அறிக்கையை வெளியிட வேண்டும் என்று நடிகை சமந்தா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.