Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

திடீரென பின்வாங்கினார் தம்மிக்க பெரேரா: மொட்டுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகின்றார் நாமல்

.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும், முன்னாள் நிதி அமைச்சருமான பசில் ராஜபக்ச இதனை உறுதிசெய்துள்ளதாகவும் கொழும்பு அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்த உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாக்காளர்கள் கட்சியின் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கோரிக்கை விடுத்துள்ளார்.

38 வயதான நாமல் ராஜபக்ச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை பலரும் உறுதி செய்துள்ளனர். அவ்வாறு போட்டியிட்டால் இந்த தேர்தலில் போட்டியிடும் இளம் வேட்பாளர் என்ற அங்கிகாரத்தைப் பெறுவார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் அந்தக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், பிரபல தொழிலதிபருமான தம்மிக்க பெரேரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும், நேற்றைய தினம் தனது முடிவில் இருந்து பின்வாங்கிய தம்மிக்க பெரேரா, தனிப்பட்ட காரணங்களுக்கான தேர்தலில் போட்டியிடவில்லை என கட்சிக்கு அறிவித்துள்ளார்.

தம்மிக்க பெரேராவின் இந்த முடிவால் மொட்டுக் கட்சி நிலைகுழைந்துள்ளதாகவும் அறியமுடிகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுமாறு பிரதமர் தினேஷ் குணவர்தனவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும், பிரதமர் அதனை நிராகரித்துள்ளார்.

இதனால் ஜனாதிபதி வேட்பாளரை கண்டுபிடிப்பதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடும் நெருக்கடியை எதிர்கொண்டதாக அறியமுடிகின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச போட்டியிடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.