Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பொதுஜன பெரமுன தனியான பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயார்! ; 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணிலுடன் கைக்கோர்ப்பார்களா?

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல மாநாடுகள் நடைபெறவுள்ளது. மஹிந்த ராஜபக்ச வேட்பாளர் ஒருவரை அறிவிப்பார்.

பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயாராகும் பெரமுன; ஐ. ம.ச உறுப்பினர்கள் ரணிலுடன் கைக்கோர்ப்பார்களா?

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து குறைந்தது 20 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்துடன் இணைந்துக் கொள்ளாவிட்டால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனியான பலமான வேட்பாளரை முன்னிறுத்த தயாராகி வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அடுத்த மாத இறுதியில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல மாநாடுகள் நடைபெறவுள்ளதுடன்,அந்த கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அந்த மாநாட்டில் வேட்பாளர் ஒருவரை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என கூறப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களை அரசாங்கத்துடன் இணைத்துக்கொள்வதற்கு ஜனாதிபதிக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுள்ள நிலையில் குறித்த காலவகாசம் நிறைவடைந்தததன் பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளரை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து கணிசமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்தில் இணைந்து கொள்வார்கள் என அரசியல் மேடைகளில் பேசப்படுகின்றது.

இதேவேளை,பெரமுனவின் வேட்பாளர்கள் குறித்த கலந்துரையாடல்கள் தொடரும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான அனைத்து பிரசாரப் பணிகளும் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், கட்சியின் மகளிர் மற்றும் இளைஞர் மாநாடுகளும் அடுத்த மாதம் நடைபெற உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

தொழிலதிபர் தம்மிக்க பெரேராவின் அந்த கட்சியின் வேட்பாளராக முன்னிறுத்த கட்சித் தலைவர்களால் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.