Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முள்ளிவாய்க்கால் பற்றி இங்கு அநேகருக்கு எதுவும் தெரியாது.

யுத்தம் முடிவடைந்த இடம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஒரு நேர உணவு இல்லாது இறந்ததை.

‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’முகநூல் பதிவு.
முள்ளிவாய்க்கால் பற்றி இங்கு அநேகருக்கு எதுவும் தெரியாது.
இரத்தமும் தசைத்துண்டுகளும் கிடந்த இடம் யுத்தம் முடிந்த இடம் என்றெல்லாம் சொல்லி முடித்துவிடுகிறார்கள். உண்மைதான் யுத்தம் முடிவடைந்த இடம்தான் ஆனால் அதையெல்லாம் தாண்டி ஒரு தொகுதி தமிழ் மக்கள் ஒரு நேர உணவு இல்லாது தமிழர் புனர்வாழ்வுக் கழகம் வழங்கிய கஞ்சிக்காக வரிசையில் நின்று இறந்ததை தவிடு நீக்காத ஏதோ ஒரு வகை அரிசியை தண்ணீரில் போட்டு அவித்து கஞ்சியாய் குடித்த கதை ஒரு தேங்காய் மூவாயிரம் ரூபா என விற்பனை செய்த கதை சொக்லெட் பஃப்1500 என விற்பனை செய்த கதை கோது நீக்காத பருப்பில் கறிவைத்த கதை வளர்த்த ஆட்டை மாட்டை வெட்டித் தின்ற கதை என எத்தனையோ கதைகள் முள்ளிவாய்க்காலுக்குள் அடங்கிப்போய் இருக்கிறது.
தேங்காய் இல்லை சிரட்டை எப்படி வந்தது எனக் கேட்கும் சிலர் உண்மையில் முள்ளிவாய்க்காலில் இருந்திருக்க வாய்ப்பில்லை அவர்கள் நானும் நானும் என இடையில் பூந்து கதை சொல்கிறார்கள் தேங்காய் வைத்திருந்தவர்கள் தேங்காய் இல்லாதவர்கள் உணவில்லாதவர்கள் உணவு வைத்திருந்தவர்கள் விறகில்லாதவர்கள் வீடில்லாதவர்கள் காசில்லாதவர்கள் என எல்லாவிதமானோரும் அங்கிருந்தார்கள் ஆனால் அதிகமானோர் உணவின்றி வி.பு.களால் வழங்கப்பட்ட கஞ்சிக்காக காத்திருந்தார்கள் அதை அவர்கள் சிரட்டையிலும் வாளியிலும் பானையிலும் கோப்பையிலும் என மாறி மாறி வாங்கினார்கள் இந்தக் கஞ்சிக்கு இந்தப்பாத்திரம்தான் கொண்டுவரவேண்டும் என்ற எந்தக் கட்டுப்பாடுகளும் அங்கு இருக்கவில்லை பாத்திரங்கள் இல்லாது வருவோருக்கு கஞ்சி வழங்கியவர்களால் கொடுக்கப்பட்டதே சிரட்டையாகும் . அதனால்தான் அந்தக் கஞ்சியை சிரட்டையில் வழங்குகிறார்கள் என்பதை விளங்கிக்கொள்ளுங்கள் .தேங்காய் எப்படி வந்தது சிரட்டை எப்படி வந்தது என்ற கதைகளை இனிக் கேக்கமாட்டீர்கள் என நினைக்கிறேன்.