Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி! சூழ்ச்சிகள் குறித்த இரகசியத் தகவல்கள் கைவசம் - அநுரவிடம் வாய்ப்பு கோரும் ஞானசார!!

.

நாட்டில் அதிகரித்து வரும் இனவெறி மற்றும் மத வெறி குறித்து தாம் சேகரித்துள்ள முக்கியமான தகவல்களைப் பெற்று விவாதிக்க ஒரு முறையான நிறுவனத்தை நிறுவுமாறு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனைக் குறிப்பிட்டார். 

குற்றப் புலனாய்வுத் துறையிடம் இல்லாத தகவல்கள்கூட தன்னிடம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

எனினும், இந்தத் தகவல்களை தாம் வைத்திருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. 

தாம் இந்த அரசாங்கத்தை நம்புவதால், அவற்றை அரசாங்கத்தால் நிறுவப்பட்ட ஒரு உண்மையான நிறுவனத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக தேரர் குறிப்பிட்டுள்ளார்.

மகா சங்கத்தினராக, பண்டைய காலங்களிலிருந்து நாட்டையும் தேசத்தையும் பாதுகாக்கும் பொறுப்பு தங்களுக்கு உள்ளது. 

கடந்த காலங்களிலும் தாங்கள் அந்த கடமைகளை செய்தபோதும், துரதிஸ்டவசமாக, எவரும் தங்களின் பேச்சைக் கேட்கவில்லை. அதற்கு பதிலாக, நாட்டில் இனவெறியை உருவாக்கியவர்கள் போல தாம் நடத்தப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை இனவெறி மற்றும் மத சகிப்பின்மை இல்லாத சூழலை உருவாக்க இப்போது நாடு ஒரு நல்ல வாய்ப்பைப் பெற்றுள்ளது, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இந்தியாவுக்குச் செல்வதற்கு முன்னர் சில மதிப்புமிக்க கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார் என்று தெரிவித்துள்ளார்.

தனது உரையில், எந்தவொரு இனவெறி நடவடிக்கைகளையும் அனுமதிக்கப்போவதில்லை என்று அவர் கூறியுள்ளார். 

எனவே இந்த வாக்குறுதியை தாம் மரியாதையுடனும் ஒப்புதலுடனும் முழுமையாக ஆதரிப்பதாக குறிப்பிட்டுள்ளார். 

பல வருட இனவெறி மற்றும் பிரிவினைவாதத்தால்  இலங்கை தேசம் சோர்வடைந்துள்ளது என்றும் தேரர் சுட்டிக்காட்டினார்.