Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்:

திருமந்திரம் ;

திருமந்திரம் ;
____________
இக்காலத்தில் மட்டுமல்ல எக்காலத்திலும் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்கிறார் திருமூலர்:
* “ இம்மனிதர்கள் ஒப்பற்ற பரம்பொருளாகிய சிவபெருமானை எண்ணமாட்டார்கள்,உயிரைப்பற்றிய உண்மைகளை ஆராய்ந்தறியமாட்டார்கள், நல்வினை தீவினைகளையும் அவற்றால் விளையும் இன்ப துன்பங்களையும் எண்ணமாட்டார்கள். சுத்த மாயை,அசுத்தமாயைகளையும் குறித்துணர மாட்டார்கள்.ஒப்பற்ற சிவபெருமானே இவற்றை தமக்கு உள்நின்று உணர்த்தியும்,அவ்வினைகளெல்லாம் கழியுமாறு இருவினைப்பயன்களை ஊட்டி அருளுகிறான் என்பதையும்,இவ்வாறெல்லாம் உணர்த்தியும் ஊட்டியும் அருவப்பொருளாய் நிற்கிறான்,அனைத்திற்கும் ஆதாரமாகவுள்ளான் என்பதையும் உணரமாட்டார்கள்.” என்று வருந்துகிறார் திருமூலர்.
“ஒருவனை யுன்னார் உயிர்தனை யுன்னார்/இருவினை யுன்னார் இரு மாயையுன்னார்/ஒருவனுமே யுள்ளுணர்த்தி தின்றூட்டி/அருவனுமாகிய வாதரத்தானே “_ _ திருமந்திரம்,2389.
ஆனால் எல்லாப் பழியையும் மனிதர்கள் மேல் சுமத்தி,அவர்களைக் குறை கூறிக்கொண்டிருந்தால் இதற்குத் தீர்வுதான் என்ன? என்று கேட்பவர்களுக்கு திருமூலர் ஒரு உபதேசத்தையும் அருளுகிறார் :
“மயப்புறு விவ்வழி மன்னிநின்றாலுஞ்/சிறப்பொடு பூநீர் திருந்தமுன் ஏந்தி/மறப்பின்றி யுன்னை வழிபடும் வண்ணம்/அறப்பெற வேண்டும் அமரர்பிரானே “ __திருமந்திரம்,1830.
என்ற “ தேவ தேவனே ! கன்ம பூமியாகிய இங்கு மலமாயைகளினால் தலைவனது தாளில் தலைப்படுதலை மறந்து வாழ்ந்தாலும்,பூவையும் நீரையும் சிறப்பாகத் திருத்தமாக ஏந்தி மறவாமல் உன்னை வழிபடுகின்ற தன்மையை மிகுதியாக (அவர்கள்) அடைதல் வேண்டும்.அதனை ( அவர்களுக்கு) அருளுக “ **
“ உயிர்கள் பிறவிச் சூழலில் அகப்படும் போது,அதற்குரிய வினைவயப்பட்டு மயங்கி,செய்வனவற்றைச் செய்யாமலும்,தவிர்க்க வேண்டியனவற்றைத் தவிர்க்காமலும் மறந்து உழலுமாதலின், தனக்கு ஒரு தலைவன் உளன்; அவன் சிவனே;அவனே எப்போதும் நினைக்கத்தக்கவன்; பூசிக்கத்தக்கவன் என்பதை மறந்து விடுகின்றன..எனவே அங்ஙனம் மறவாது பூவும் நீரும் ஏந்திப் பூசிக்கவும்,வந்திக்க,வாழ்த்த வரந்தரல் வேண்டும்.” _என்று அன்றாட பூசையில் இறைவனைப் பிரார்த்திப்பீராக “ *
__ என்று நமக்கெல்லாம் உபதேசித்திருக்கிறார்.
ஆனால், “ எனக்கு நேரமில்லை,அது சரியில்லை,இது சரியில்லை,வீட்டில் ஒத்துழைப்பில்லை,வேலை செய்யும் இடத்திலும் பிரச்சனை,” என்று சொல்ல ஒவ்வொருவருக்கும் ஆயிரம் காரணங்கள் நமக்குள்ளன. என்ன செய்ய ? ஒவ்வொருவரும் ஓவ்வொரு தனித்தனி ஆன்மா,அவரவர் ஆன்மா கடைத்தேற அவரவர் தானே வழிதேட வேண்டும்.?
இதை நினைவில் கொள்ளுதல் நலம் :
“அவரவர் வினைவழி அவரவர் வந்தனர்/அவரவர் வினைவழி அவரவர் அனுபவம்/எவரெவர்க் குதவினர்/எவரெவர்க் குதவிலர்/தவரவர் நினைவது தமை உணர்வதுவே “ ___சிவபோகசாரம் (தனிப்பாடல்கள்)
(** நன்றி: திருவாவடு துறை ஆதீனம்,திருமந்திரம் உரை நூலிலிருந்து)
 
 
 
Toutes les réactions :
1010