Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

வேட்பாளர்களுக்காக பிரச்சாரத்தில் இரத்தினபுரி தமிழ் ஆசிரியர்கள்; மாணவர்கள் சிரமம்

.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, ஆதரவாக சக ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக பெற்றோர் குற்றஞ் சுமத்துகின்றனர்.

பாடசாலை நேரங்களிலும், பாடசாலை முடிவடைந்த பின்னரும் ஆசிரியர்கள், தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், மாணவர்களின் கல்வி நடவடிக்கை நேரடியாகவே பாதிக்கப்படுவதாக பெற்றோர்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்கு அதிபர்களின் ஆதரவை கோரி அண்மையில் விசேட கூட்டங்கள் நடாத்தப்பட்டு வருகின்றன.

இதில் குறிப்பாக, தேசிய மக்கள் சக்தியின் சார்பாக ஒரு ஆசிரியரும், ஐக்கி மக்கள் சக்தி சார்பாக ஒரு ஆசிரியரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

இவர்கள் இருவருக்கும் ஆதரவு வழங்கும் முகமாகவே மேற்படி ஆசிரியர்கள் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அதிகளவில் ஆசிரியர்கள் ஆதரவை கோரி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில பாடசாலைகளில் அதிபர்களின் அனுமதியுடன், ஆசிரியர்கள் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுத்துவதை தவிர்க்குமாறு வேட்பாளர்களிடம்,பெற்றோர் கோரிக்கை விடுத்தும் இந்த செயற்பாடு தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளில் ஈடுபடும் வேட்பாளர்களை நம்பி எவ்வாறு வாக்களிப்பது என பெற்றோர் கேள்வி எழுப்புகின்றனர்.

அத்துடன், தேர்தல் நடவடிக்கைகளில் ஆசிரியர்கள் ஈடுபடுவதை தவிர்க்கும் வகையில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணைக்குழுவிடம், பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ஆகவே, இவ்வாறான விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு மாத்திரமன்றி வலய கல்வி பணிமனையும் அது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கோரிக்கை பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.