Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்; மொத்தம் 311,000,000 ரூபாய் இழப்பீடு கிடைக்கப்பெற்றுள்ளது

.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 12ஆம் திகதி உயர்நீதிமன்ற வழங்கிய தீர்ப்பின்படி மொத்தம் 311,000,000 ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீட்டுக்கான அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீட்டு நிதி வழங்கப்பட்டுள்ளது.

இழப்பீடுகளுக்கான அலுவலகம் பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளை அடிப்படையாகக் கொண்ட மதிப்பீடுகளின் பிரகாரம் இந்த நிதியை வழங்கி வருகிறது.

மொத்த தொகையான 311,000,000 ரூபாயில் 62,345,502 ரூபாய் இதுவரை வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிதி சத்திரசிகிச்சைச் செலவுகள், குழந்தைகளின் கல்வி, நிரந்தர ஊனமுற்றோர் மற்றும் ஏனைய தேவைகளுக்குச் செலவிடப்பட்டுள்ளது.

ஈஸ்டர் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்காக 2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18ஆம் திகதியன்று இழப்பீடு விநியோகத்தை உயர்நீதிமன்றம் மீள்ஆய்வு செய்யும்.

இந்நிலையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்தனவும் தனக்கு விதிக்கப்பட்டிருந்த தொகையை செலுத்தி நிறைவு செய்திருந்தார்.

மேலும் , இந்த வழக்கில் பிரதிவாதிகளுக்கு இழப்பீடாக வழங்க உத்தரவிடப்பட்ட பெருந்தொகை நிதி எங்கிருந்து கிடைத்தது என்பது குறித்து தற்போது பல கேள்விகள் எழுந்துள்ளன.