Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஊடகவியலாளர் சந்திப்பு!

.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் கலந்து கொள்ளும் ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இன்று (16) நடைபெற்றது.

ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று கூறினார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இந்தியப் பிரதமரை இலங்கைக்கு விஜயம் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அழைப்பு விடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி,

2 வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.

பொதுச் சேவைகளை டிஜிட்டல் மயமாக்குவதில் இந்தியா பெரும் வெற்றியைப் பெற்றுள்ளதாகவும், இலங்கையும் அதே பாதையில் செல்வதாகவும், இந்த முயற்சிக்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதாக இந்தியப் பிரதமர் உறுதியளித்துள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

மேலும், இரு நாடுகளுக்கும் பெரும் பிரச்சினையாக உருவாகியுள்ள கடற்றொழில் பிரச்சினைக்கு நிரந்தரமானதும் நிலையானதுமான தீர்வு ஒன்று காணப்பட வேண்டும் எனவும், மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித் தொழில் அழிந்து வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

அந்த நிபந்தனைகள் மற்றும் அதை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு இந்திய பிரதமரிடம் ஜனாதிபதி கோரிக்கை ஒன்றையும் முன்வைத்துள்ளார்.

அத்துடன், இந்தியாவின் பாதுகாப்புக்கும், பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கையை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை எனவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.